2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

லியங்கஹவல வீதி தாழ்யிறக்கம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம்,லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி வியாழக்கிழமை (04) அன்று தாழ் இறங்கியுள்ளது.

குறித்த இடம் இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சிநிறுவனத்தின் அறிக்கை பெறப்பட உள்ளது.

அந்த வீதி வழியாக வாகனங்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது, இதற்கிடையில்,பதுளையில் உள்ள அலகொல்ல மலைகளின் கல்வல பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் தரையில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது,

மேலும் அந்த இடத்திற்கும் தரை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவமையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X