2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விடிந்தும் ஆர்ப்பாட்டம் தொடர்வதால் வீதிகளில் பெரும் நெரிசல்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட, நவலோக்க சந்தியில் வீதிகளை மறித்து நேற்றிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்வதனால், கொழும்பு-நீர்கொழும்பு மற்றும் கொழும்பு-கண்டி ஆகிய பிரதான வீதிகள் மற்றும் இதர வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், கொழும்பிலும் பல வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது .  நகர அபிவிருத்தி அதிகாரசபை, தங்களுடைய வீடுகளை உடைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொட்டலங்க,  தஜ்மா வத்தையில் சட்டவிரோதமாக நிர்மானிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X