2025 மே 22, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் பலி; ஒருவர் படுகாயம்

Thipaan   / 2016 ஜனவரி 02 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை- கெக்கிராவ பிரதான வீதியின் கைலபதன பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை(01) இடம்பெற்ற வாகன விபத்தில், காரொன்றில் பயணித்த இருவர் பலியானதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியால் பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி, வீதிக்கருகிலிருந்த பாறையொன்றில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த பயணித்த திலின சுராஜ்(வயது 35), அசித்த பெலன (வயது 30) ஆகியோர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கார், அதிக வேகத்தில் பயணித்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X