2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

விபத்தில் உக்ரைன் பிரஜை பலி

Kogilavani   / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ, தெரணியகலவில் இன்று(17) காலை இடம்பெற்ற விபத்தில், உக்ரைன் நாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் யுரி குசின்கோ என்ற 31 வயது நபரே பலியாகியுள்ளார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேற்படி நபர் கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததாகவும் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .