Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்கம- புஸ்ஸ பிரதேச வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்மாகாண விசேட பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் 23ஆம் திகதி இரவு 10 மணியளவில் 33,31 வயதான வர்த்தகர்கள் இருவர் பொலிஸ் சீருடையில் வந்த சிலரால் கடத்தப்பட்டதாக கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6ஆம் திகதி கடத்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதாகவும் அதில் நுபே பொலிஸ் நிலைய அதிகாரிகளால் வர்த்தகர்கள் இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனரென குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கடிதம் தொடர்பில் உறவினர்கள் பல பொலிஸ் நிலையங்களின் செய்த முறைபாட்டுக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுத்து வரும் விசாரணைகளையடுத்து பொலிஸ் பரிசோதகர் காலியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
6 hours ago