2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’வலயக் கல்விப்பணிமனைகள் அதிகரிக்கப்படும்’

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொகுதி வாரியான கல்விப் பணிமனைகளை நீக்கிவிட்டு, வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

நாட்டில், 98 வலயக் கல்விப் பணிமனைகள் உள்ள நிலையில், அவற்றை 200ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதற்காக தொகுதி வாரியிலான கல்விப் பணிமனைகளை நீக்கி, அவற்றுக்கு வழங்கப்படாத நிதி அதிகாரங்களை, வலயக் கல்விப் பணிமனைக்கு வழங்கி, அவற்றின் நிர்வாகத்தை இலகுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதன் காரணமா​கவே, வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, ஆசிரியர்களை கையிறுப்பில் வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .