2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வெளிநாட்டிலிருந்து வந்த பெண் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலண்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் வாந்தி எடுத்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தர் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயலட்சமி (வயது 61) என்ற மூன்று பிள்ளைகளைகளின்  தாயாராவார்.

மேற்படி குடும்பப் பெண் கந்தர் மடத்தில் தங்கி இருந்த நிலையில் நேற்று வெள்ளிக் கிழமை அதிகாலை வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சில மணித்தியாலங்களில் அவர் உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X