2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Editorial   / 2020 ஜூன் 06 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை  அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கு அதிக மழை பதிவாகலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு  மாவட்டங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடுமெனவும் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .