2025 ஜூலை 05, சனிக்கிழமை

வவுனியா விபத்தில் 10 பேர் காயம்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று இன்று அதிகாலை (30) வவுனியா- இரட்டைப்பெரியகுளம்- குருந்துபிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் அதிக வேகமாகப் பயணித்தமையே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 10 பேரும் ஆண்களென்றும் இவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் அநு​ராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .