Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 28 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை, நெளும்தெனிய மொரவக்க பிரதேசத்தில இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) காலை 8 மணியளவில் கம்பொலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணஞ்செய்த தனியார் பஸ் ஒன்றை பின் தொடர்ந்து சென்ற ஓட்டோவொன்று, வான் ஒன்றுடன் மோதுண்டதில் விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்தில் ஓட்டோவில் பயணித்தவர்கள் வீதியில் விழுந்துள்ளதோடு, பஸ் அவர்கள் மீதேறி சென்றுள்ளது. சம்பவத்தில் ஓட்டோ சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த நபர் வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரென்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஓட்டோவில் பயணஞ்செய்த தந்தை (39 வயது), மகள்(17 வயது) ஆகியோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி மற்றும் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago