2025 மே 07, புதன்கிழமை

வாள் வெட்டில் கையை விட்டோடிய இளைஞன்

Janu   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாரவில , பஹல வலஹாபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 23 வயதுடைய இளைஞன் ஒருவனின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டதுடன், காயமடைந்த நபர் கையை சம்பவ இடத்தில் விட்டு தப்பியோடியுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர் .

சில காலமாக நிலவி வந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

காயமடைந்த இளைஞன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , தாக்குதலை மேற்கொண்ட நபர், கீழ் வலஹாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான் 35 வயதுடையவர் என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X