2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விபத்தில் 7 பேர் காயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்- அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உள்ளிட்ட 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வானொன்று, பொருள்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் மோதியதால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் முல்லைதீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள்  வெளிநாடு ​சென்ற உறவினரொருவரை வழியனுப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று திரும்பியவர்களென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .