2026 மார்ச் 19, வியாழக்கிழமை

விபத்தில், தாய் மரணம்; தந்தை, மகள் படுகாயம்

J.A. George   / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை, பாணந்துறை வீதியின் குலுபன பிரதேசத்தில் ஏற்பட்ட வித்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த முச்சக்கரவண்டி, பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, ரைகம பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா பிரியதர்ஷனி (வயது 40) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொரண நகருக்கு வந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .