2025 ஜூன் 18, புதன்கிழமை

விபத்தில் மூவர் பலி

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை – கம்பளை வீதியின் கெலிஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலம்பொடை பகுதியைச் சேர்ந்த 53 மற்றும் 54 வயதான தம்பதியினரும் கெலிஓயாவைச் சேர்ந்த 54 வயதான ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கெலிஓயா நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் ஒன்றுடன் மோதுண்ட பாதசாரி, பின்னால் வந்த ஓட்டோவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து, குறித்த ஓட்டோ வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருடன் மோதி குடை சாய்ந்துள்ளது.

இந்த விபத்தில், மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், பாதசாரி மற்றும் ஓட்டோவில் பயணித்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஓட்டோவில் பயணித்த இருவரும் பாதசாரியும் உயிரிழந்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .