2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

75 மில்லியன் ரூபாய் பணத்தை சட்டவிரோதமான முறையில் சேகரித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கானது  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2010 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமைச்சராக செயற்பட்ட போது, 75 மில்லியன் ரூபாய் பணத்தை சட்டவிரோதமான முறையில் விமல் வீரவன்ச சேகரித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .