2026 மே 05, செவ்வாய்க்கிழமை

விமான பயணிகளுக்கு வரையறை

Editorial   / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.பி.கபில

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதையிட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கமைய, பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளுக்கு பயணிகள் பிரவேசிப்பதற்கு, நேற்று (04) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  விமான நிலையத்தில் அமைந்துள்ள பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளுக்கு, பயணிகளுடன் விருந்தினர்கள் பிரவேசிக்கவும்,பொதுமக்கள் வருகை தருவதற்கும் மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .