2025 ஜூலை 12, சனிக்கிழமை

விமானங்களை தரையிறக்குவது இடைநிறுத்தம்

Editorial   / 2020 மார்ச் 18 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது இன்று (18) நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடைய நபர்கள் நாட்டிற்கு வருகைதருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணியுடன் விமானங்களை தரையிறக்குவது இடைநிறுத்தப்படவுள்ள நிலையில், பயணிகள் எவருக்கும் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாது என, இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

எனினும், இலங்கையிலிருந்து வெளியேறுதல், விமானப் பயண இடைமாறல் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் விமான சேவை என்பன தொடர்ச்சியாக இடம்பெறும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .