2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

‘விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம்’ : கணவன் தெரிவிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

திருகோணமலை காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகிறதெனவும் தனது மனைவி விரிவுரையாளர் என்பதால், கிழமையில் ஐந்து நாள்கள் திருகோணமலையில் இருப்பாரெனவும் அவர் தெரிவித்தார்.

தான் கிளிநொச்சியில் வேலை பார்ப்பதால், கிளிநொச்சியில் இருப்பதாகத் தெரிவித்த அவர், வார இறுதி நாள்களில் தான் திருகோணமலைக்குச் செல்வதாகவும் அல்லது தனது மனைவி  கைச்சிலை, மடுவில் உள்ள தமது வீட்டுக்கு வருவாரெனவும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் கூட அவர்தான் இங்கு வந்திருந்தாகவும் அவர் கர்ப்பிணியாக இருப்பதால் பதிவுகள் மாற்றப்பட வேண்டிய தேவை இருந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த புதன்கிழமை எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், இரண்டு நாள்களும் தான் விடுமுறை எடுத்துகொண்டு வருவதாகவும் தங்கள் பதிவுகளையும் மேற்கொண்டு தனது அம்மா வீட்டுக்கும் செல்வோமெனவும் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவரது அலைபேசி வேலை செய்யவில்லை. சில வேளை வேலைப்பளு என நான் நினைத்தேன். எனில், அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என நினைத்தேன்.

பின்னர்தான் அவரது  அம்மாவும் அங்கு வரவில்லை காணவில்லை எனத் தன்னிடம் கூறியப்பின்னர் அவரது கைப்பையும் சடலமும் திருகோணமலை நகர கடற்கடைப் பகுதியில் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது.

எனது மனைவி தற்கொலை செய்யக் கூடியவள் அல்ல. அதற்கான எந்த தேவையும் இல்லை. இந்த மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

குறித்த விரிவுரையாளரின் மரணத்துடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X