2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 28 இளைஞர், யுவதிகள் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபாசாரம் ஒன்றில் போதைப்பொருள்களுடன் இருந்த 28 இளைஞர், யுவதிகளை அக்மீமன பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள்  26 இளைஞர்களும் 2 யுவதிகளும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் மாத்தளை, அநுராதபுரம், மொரட்டுவ, அம்பாறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கராப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் விஷ போதைப்​பொருள்களை பயன்படுத்தியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறியமை ஆகியவற்றின் கீழ், இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .