2025 மே 07, புதன்கிழமை

வீதி விபத்துகளால் அதிகமானோர் பலி

S. Shivany   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி விபத்துகள் அதிகரித்து வருவதையிட்டு, மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, 185 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 4,962 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, அவற்றுள் அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், நாளாந்தம் வீதி விபத்துகளால் 7 அல்லது 8 பேர் உயிரிழக்கின்றனர் என, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X