2025 ஜூன் 18, புதன்கிழமை

வெலிகடைச் சிறைப் படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எல்.ரி.யுதாஜித்) 

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் குட்டிமணி,  தங்கதுரை உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட, வெலிகடைப் படுகொலையின் 37ஆவது நினைவு தினம் இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்டவேட்பாளர் கோவிந்தம் கருணாகரம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் குட்டிமணி, தளபதி தங்கதுரை ஆகியோரின் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1983ஆம் ஆண்டு ஜுலை 25 - 27ஆம் திகதி வரையிலானக் காலப்பகுதிகளில் நடைபெற்ற வெலிகடைச் சிறைச்சாலை கலவரத்தின் போது குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்ட போராளிகள், பொதுமக்கள் என 53 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .