2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக பறந்த ட்ரோன் கமெரா

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக நேற்று (19) இரவு ட்ரோன் கமெரா ஒன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 8 மணி தொடக்கம் 8.15 மணிக்கிடையில் இந்த கமெரா பறந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில், சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து, இந்த ட்ரோன் கமெரா தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  சிறைச்சாலை வளாகத்துக்குள் இவ்வாறான ட்ரோன் கமெராக்களை கண்டால் சுட்டு வீழ்த்துமாறும் பணிப்பாளர் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .