2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வெலிக்கடையில் மூன்று பெண் கைதிகள் இடமாற்றம்

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் தடைசெய்யப்பட்ட பொருள்களை கொண்டு வந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட மூன்று பெண் கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள  மூன்று பெண் கைதிகளே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட பொருள்கள் அடங்கிய மூன்று பொதிகள், வெலிக்கடை சிறைச்சாலையின் மதில் ஊடாக பெண்கள் பிரிவில் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

அலைபேசி, உதிரிபாகங்கள், ஹெரோய்ன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் குறித்த பொதிகளில் காணப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்திருந்தது.

முன்னதாக, கடந்த சில வாரங்களாக இவ்வாறான பொருள்கள் அடங்கிய பொதிகள் வெலிக்கடை  சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .