2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வெளிநாடு செல்லவிருந்த 22 பேர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில், வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​சியபலாண்டுவ பகுதியில் தங்கியிருந்த 22 பேரை, பொலிஸார் இன்று (14) கைது செய்துள்ளனர்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் பின்னரே, இந்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, அவர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

ஆள்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடும் இரண்டு சந்தேக நபர்கள், திஸ்ஸமஹாராம - பன்னேகமவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .