2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் நபர்கள் பலி

Editorial   / 2019 ஜனவரி 13 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் – தம்புள்ளை வீதியில்  முத்ததெட்டுகல பி​ரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சறுக்கி விழுந்ததில், குறித்த நபர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் நிதஸ்கம – வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் தெரிவித்தப் பொலிஸார், குருநாகல் – நீர்கொழும்பு வீதியில் கொட்டகஸ் சந்தியில் அலியாவெல வாய்காலுக்கு அருகில்  ஓட்டோ ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் மடவல பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதுடைய நபரென்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .