2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் பலி

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தள – கதிர்காமம் பிரதான வீதியில் கரவிலகொட்டுவ பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற வான் விபத்தில், இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வான் வீதியை விட்டு விலகியமையால் விபத்து நேர்ந்துள்ளதாகத் ​தெரிவித்த பொலிஸார், விபத்தில் காயமடைந்த நால்வரும் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் காலி – மாத்தறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த பி​ரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

பஸ் மற்றும் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதிலேயே விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .