2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வௌ்ளத்தில் சிக்கிய பஸ் சாரதி, நடத்துநருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, மனம்பிட்டிய, கல்லேல்ல பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்னர்.

சந்தேக நபர்கள் பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து  எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கவனயீனமாக வாகனம் செலுத்தியமை மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (21) கைது செய்யப்பட்டனர்.

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டிய கல்லேல்ல பகுதியில் குறித்த பஸ் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் 54 பயணிகள் பயணித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .