2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்குத் தடுப்புக் காவல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தோட்டையில் 20 கிலோ 876 கிராம் ஹெரோய்ன் மற்றும் 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்த நபரை, எதிர்வரும் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்குமாறு பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) உத்தரவிட்டார். 

அம்பலாந்தோட்டைப் பொலிஸாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்ட நபரை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்

சந்தேகநபரிடம், அம்பலாந்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X