2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஹக்கீமாக மாறிய சிவலிங்கம் கைது

Editorial   / 2019 மே 01 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்  பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றிய தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டாரகம- அட்டுலுகம மாராவ பிரதேசத்தின் பைகுர் ரஹ்மான் பள்ளியில் வைத்தே பெருமாள் சிவலிங்கம் என்ற குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரும், இராணுவத்தினரும் இன்று பண்டாரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னர் பண்டாரகம பிரதேசத்துக்கு வருகைத் தந்த குறித்த நபர், மொஹமட் ஹக்கீம் என்ற பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றி வந்துள்ளதுடன், நாளொன்றுக்கு 5 தடவைகள் மத போதனைகளையும் நடத்தியுள்ளாரென ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இவர் இதுவரை கிராம அலுவலரைக் கூட சந்தித்து எவ்வித பதிவையும் மேற்கொண்டதில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவரது வங்கிக் ​கொடுக்கல் வாங்கல்கள் சிவலிங்கம் என்ற பெயரிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .