2025 மே 22, வியாழக்கிழமை

ஹப்புத்தளை எஸ்.ஐக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் உப-பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ)விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தீயினால் எரிந்து சாம்பாராகிபோன முச்சக்கரவண்டிக்கு காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்காக அதன் உரிமையாளருக்கு பொலிஸ் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கே அவர், 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சம் பெற்றார் என்று அறியமுடிகின்றது.

அவ்வறிக்கையை கொடுப்பதற்காக முதலில் 30ஆயிரம் ரூபாவை கோரியதாகவும் அதில் 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு முயன்றபோதே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .