2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஹம்பாந்தோட்டை மேயருக்கு பிணை

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர பெர்ணான்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை அடுத்து, அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் காசு பிணை மற்றும்  5 சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி 2014ஆம் ஆண்டு துப்பாக்கியுடன் ஓடி வந்த  எராஜ் ரவீந்திர பெர்ணான்டோ, பின்னர் அது விளையாட்டுத் துப்பாக்கி என, தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X