2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஹோட்டல் உரிமையாளர் படுகொலை; 30 பேரிடம் வாக்குமூலம்

Editorial   / 2020 ஜூலை 08 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் 30 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சுற்றியுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்துவருவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

50 வயதுடைய, ஹோட்டல் உரிமையாளர் சடலமாக நேற்று (07) மீட்கப்பட்டதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இகுறித்த ஹோட்டலுக்குள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,  அதிகாலை 4 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .