Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதான 9 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் யூ.எல்.அஸ்ஹார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 9 பேரையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் யூ.எல்.அஸ்ஹார் முன்னிலையில் ஆஐர்படுத்தியபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய 9 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் இதன்போது, 49 முதிரை மரக்குற்றிகளும் மெசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கும்புறுப்பிட்டி பகுதியிலிருந்து கிடைத்த தகவலையடுத்து காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago