Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாயிலிருந்து கொழும்புக்கு அனுமதிப்பத்திரமின்றி 14 ஆடுகளை வானொன்றில் ஏற்றிக்கொண்டு சென்றதாகக் கூறப்படும் 03 பேரை செவ்வாய்க்கிழமை (22) மாலை கைதுசெய்துள்ளதுடன், அந்த ஆடுகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வானை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது ஆடுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடுகள் இறைச்சிக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
வானின் சாரதி உட்பட உதவியாளர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago