Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வடமலை ராஜ்குமார்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,பைஷல் இஸ்மாயில்
சிறுவர்களைப் பராமரித்தல் என்பது இலகுவான விடயமல்ல. தனது குழந்தையைப் பராமரிக்கவே சிலர் கஷ்டப்படும்போது பொறுமையுடன் வேறொருவருடைய குழந்தையை பராமரிக்க சிறந்த மனம் ஏற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சிறுவர் பாதுகாப்பு, பராமரிப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
திருகோணமலை, துளசி புரத்தில் இன்று திங்கட்கிழமை சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பெற்றோர்களை இழந்த அல்லது பெற்றோர்களால் கைவிடப்பட்ட இப்படியான பச்சிளம் குழந்தைகளின் முகங்களைப் பார்க்கின்றபோது மிகவும் கவலையாக இருக்கிறது.
குழந்தைகள் இல்லாத வீடுகளில் இருப்போரைக் கேட்டால் குழந்தையில்லாத குறைகளைப் பற்றி கண்ணீர் மல்க கதை சொல்வார்கள்.
இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அருட்கொடைகளாக இருக்கும் குழந்தைகளைக் கண்காணிக்க முடியாமல் இருக்கும் பெற்றோர் பெரும் பாவம் செய்தவர்கள் என்றே நான் நினைக்கிறேன்.
அநாதைக் குழந்தைகளை சிறப்பாகப் பராமரிக்கின்றபோது சிறந்த சமுதாயம் ஒன்றினை உருவாக்க முடியும். சிறுபராயத்தில் குழந்தைகள் வளர்க்கப்படும் முறையிலேயே அவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தங்கியுள்ளது.
ஒழுக்கம் தவறி வளர்க்கப்படுகின்றபோது சமுதாயத்தில் சீரழியும் ஒருவராக அந்த பிள்ளை மாறிவிடுகிறது.
எனவே, சிறுபராயத்தில் இருந்து ஒழுக்க விழுமியங்களை சிறப்பாகக் கற்றுக் கொடுத்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
நான் பொறுப்பேற்றுள்ள இந்த அமைச்சின் மூலம் இப்படியான குழந்தைகளின் பாதுகாப்புக்காக என்னால் முடிந்த உதவிகளை சரியாகச் செய்வேன் என்றார்.
12.2 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட இக்கட்டடத் திறப்பு விழா நிகழ்வு சிறுவர் பராமரிப்பு திணைக்களப் பணிப்பாளர் எஸ். கங்கா தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன், அமைச்சின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago