2025 ஜூன் 09, திங்கட்கிழமை

'59 சதவீதமானோர் வீட்டுத் திட்டத்தில் நிராகரிப்பு'

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலை,சம்பூர் பிரதேசத்தில்  மீள்க் குடியேற்றத்தின் பின்னர் இந்திய உதவி  வீடுகளைப் பெறுவதற்குத் தெரிவானவர்களில் 59 சத வீதமான குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வீடுகளை பெற விதிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் புள்ளிகளின் அடிப்படையிலேயே இந்த குடும்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பூர்  பிரதேசத்தில் தற்போது அதிகாரபூர்வமாக  344 குடும்பங்கள் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து மீளக்குடியேறியுள்ளன.

அங்கு அரச முதலீட்டு வலயத்துக்கென  சுவீகரிக்கப்பட்டு முதல் தொகுதியாக  விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் மட்டும்  204 குடும்பங்கள் மீள்க்குடியேறியுள்ளன.

இந்தக் குடும்பங்களே பிரதேச செயலக அதிகாரிகளினால்  முன்னுரிமை அடிப்படையில்    இந்திய உதவி வீடுகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன.
 
இந்திய உதவி  வீடமைப்பு திட்டத்தை செயல்படுத்தும்  யு. என். ஹபிட்டாற் வெளியிட்டுள்ள பட்டியலில் 84  குடும்பங்கள் மட்டுமே இந்திய உதவி வீடுகளைப் பெற தகுதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது பற்றிய  கூட்டமொன்றில்  யு. என்.  ஹபிட்டாற் உட்பட ஏனைய அதிகாரிகளினாலும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போது,  அனைத்து குடும்பங்களும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து நிபந்தனைகள் அல்லது  புள்ளி வழங்குதலில் தங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்  என்று அதிகாரிகளிடம்  வலியுறுத்தியுள்ளேன்.

அந்த வகையில்,காணி உரிமையாளர்களிடம்  மீள கையளிப்பின் போது 204 குடும்பங்களுக்கும் அறிவிக்கப்பட்டவாறு  இந்திய உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார்.

மேலும்,2008 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் தற்போது வழங்கப்படுகின்ற  5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகை போதுமானதாக இல்லை என்பதால் அந்தத் தொகை ஆகக் குறைந்தது  7 இலட்சமாக ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

6 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5