Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளை ஒன்றிணைத்து புதிய கல்முனை மத்திய கல்வி வலயத்தை உருவாக்கித்தர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் அமர்வு செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றபோது, அவர் தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கல்முனைக் கல்வி வலயத்தில் 22 தமிழ்ப் பாடசாலைகளும் சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் 32 தமிழ்ப் பாடசாலைகளுமாக மொத்தம் 54 பாடசாலைகள் இயங்குகின்றன. இந்தப் பாடசாலைகளில் 16,785 தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த மாணவர்களுக்கு 1,108 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இவ்வாறான நிலையில்;, இந்தப் பாடசாலைகளில் நிர்வாக ரீதியாக பௌதீக வளப்பங்கீடு, ஆசிரியர் இடமாற்றம் மற்றும் ஏனைய விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுகின்றது' என்றார்.
'எனவே, இந்தப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமாயின், அனைத்துப் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து தனியானதொரு கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும்;, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உருவாக்கப்பட்டமை போன்று, இந்த வலயத்தை உருவாக்கமுடியும்' என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago