Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை உணவு பாதுகாப்பு குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 8 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கிண்ணியா பகுதியில் 5 நிறுவன உரிமையாளர்களுக்கும் தம்பலகாமம் பகுதியில் 3 நிறுவன உரிமையாளர்களுக்கெதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக திருகோணமலை உணவு பாதுகாப்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த வாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, தபால் நிலையத்துக்கு அண்மையில் உள்ள 5 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கெதிராக வியாழக்கிழமை(03) வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது,திருகோணமலை நீதவான் அவர்களை 25,000 ரூபாய் சரீர பிணையில் விடுவித்து வழக்கை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைத்தார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026