2026 மார்ச் 23, திங்கட்கிழமை

8 வர்த்தகர்களுக்கு தண்டம் விதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

விற்பனைப் பொருட்களுக்கான விலையை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்யப்பட்ட 08 வர்த்தகர்களுக்கு தலா 1,500 ரூபாய் படி தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இவர்களை ஆஜர்படுத்தியபோது, இவர்கள் தங்களின் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இந்நிலையிலேயே, இவர்களுக்கு மேற்படி தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களில்; நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனையின்போது விற்பனைப் பொருட்களுக்கு விலையை காட்சிப்படுத்தாமை, உற்பத்தி மற்றும் முடிவுத்திகதிகளை தெளிவாக குறிப்பிடாமை  உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .