2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவர் கைது

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                         

கந்தளாய் பிரதேசத்தில் 18 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை(8) பகல் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.   

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போதே பாதணிக்குள் 18 மில்லி கிராம் ஹெரோயின்  இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .