2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

11 விளையாட்டு மைதானங்களுக்கு ரூ.55 மில். நிதியொதுக்கீடு

Princiya Dixci   / 2021 ஜூலை 21 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 55 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். 

இதன்படி, ஒரு மைதானத்தின் அபிவிருத்துக்கு தலா 5 மில்லியன் ரூபாய் வீதம் செலவு செய்யப்படவுள்ளது. 

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மூலம் இவ்வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

இந்த வேலைத்திட்டங்களை உடன் ஆரம்பித்து விரைவில் நிறைவு செய்யுமாறு, கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு நிதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதற்கமைய, அம்பாறை - தமண அலஹேன விளையாட்டு மைதானம், சம்மாந்துறை - நாவிதன்வெளி பொது விளையாட்டு மைதானம், பொத்துவில் - லாஹூகல பிரதேச சபை பொது விளையாட்டு மைதானம்,  கல்முனை - பொலிவேரியன் விளையாட்டு மைதானம்,  கல்குடா - பேத்தாளை பொது விளையாட்டு மைதானம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் அதிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேலும், மட்டக்களப்பு - வேலூர் சக்தி பொது விளையாட்டு மைதானம்,  பட்டிருப்பு - முனைக்காடு பொது விளையாட்டு மைதானம், சேருவில - சேருவில பொது விளையாட்டு மைதானம்,  திருகோணமலை - அபயபுர பொது விளையாட்டு மைதானம்,   மூதூர் - மூதூர் பொது விளையாட்டு மைதானம், மூதூர் - கிண்ணியா பொது விளையாட்டு மைதானம் ஆகிய விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .