Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 22 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்.அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலையில் இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகிறது.
திருகோணமலையில் இலங்கை மின்சாரசபை ஊழியர்களை தாக்கியவர்கள் மீது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை முதல் இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றையதினம் நண்பகல் 12.30 மணியளவில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய இலங்கை மின்சாரசபையைச் சேர்ந்த சுமார் 70 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
'தம்மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் உடனடியாக கைதுசெய்ய வேண்டும்', 'சுதந்திரமாக செயற்படுவதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும்', 'ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்' போன்ற கோஷங்களை எழுப்பியவாறு இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
6 hours ago
7 hours ago