2025 மே 14, புதன்கிழமை

வகுப்பறையில் நுழைந்து மாணவியை தாக்கிய பெண் பொலிஸாரால் கைது

Menaka Mookandi   / 2011 மார்ச் 23 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை பாடசாலையொன்றில் மாணவியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து வகுப்பறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவியை குடும்ப தகராறு காரணமாக  தாக்கியதாக அப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

19 வயதான மேற்படி மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X