Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, திருகோணமலை பொதுவைத்தியசாலை ஊழியர்களுக்கிடையில் இனநல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் கலை, விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் ஈ.ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.
04ஆம், 05ஆம், 06ஆம் திகதிகளில் நான்கு குழுக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளதுடன், மரதன் ஓட்டம், முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், யோகட் சாப்பிடுதல், தேங்காய் திருவுதல், கிடுகு பின்னுதல், கயிறு இழுத்தல், வருடத்தின் வைத்தியசாலை அழகன், அழகி போன்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இவ்வைத்தியசாலையின் முதல் தடவையாக இடம்பெறும் கலை, விளையாட்டு நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago