2025 மே 14, புதன்கிழமை

வெள்ள பாதிப்பிற்குள்ளான பூவரசந்தீவு கிராம மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்,எஸ்.எஸ்.குமார்)
 
திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான   வாழ்வாதார உதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை பைத்துள் சங்கத்தின் நிதியுதவியுடன் செரண்டிப் நிறுவனம் இம்மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கியது. மீன்பிடித்தொழிலில் ஈடுபடும்  இரண்டு குடும்பங்களுக்கு  ஒரு வள்ளம்  என்ற அடிப்படையில்  11 மீன்பிடி வள்ளங்களும்  அவற்றுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன்,   17 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும்  ஒரு குடும்பத்திற்கு 3 ஆடுகள் வீதம் 38 குடும்பங்களுக்கு இவ்வாறான  வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X