2025 மே 14, புதன்கிழமை

புதுவருட பிறப்பை முன்னிட்டு விளையாட்டு போட்டி

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள்,  ஊழியர்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு நேற்று மாலை வைத்தியசாலை கடற்கறைப் பகுதியில் இடம்பெற்றது.

வைத்தியசாலை அத்தியட்சகர்,  சமூக சேவையாளர் டாக்டர் ஈ.ஜி. ஞானகுனாளன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,  கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.தேவராஐன் பிரதம விருந்தினராக  கலந்து கொண்டார்.

வைத்தியசாலை டாக்டர்கள்,  ஊழியர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்நிகழ்வானது நோயாளர்கள் விடயத்தில் அக்கறையுடன் செயல்படக்கூடியதாகவும், இன நல்லுறவையும்,  சகோதரத்தன்மையையும் மேம்படுத்துவதாகவும் அமையும் எனவும் வைத்திய அத்தியட்சகர் ஞாணகுனாளன் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X