2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாவிலாறு குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலாறு குளத்தில் குளிக்கச்சென்ற சுற்றுலாப்பயணி ஒருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி மரணமாகியுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

பன்வில, மெல்கனியாகம பல்லேகம பகுதியைச்சேர்ந்த 32 வயதுடைய புஸ்பகுமார என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்தினருடன் திருகோணமலை பகுதிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்தவேளையிலே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X