2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலை நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் பதவி பொறுப்பேற்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 18 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்று திருகோணமலை நகர சபையில் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வெற்றியீட்டில் உறுப்பினர்கள் திங்கட்கிழமை காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நகர சபையின் தலைவர் க.செல்வராசா தலைமையில் இவ்வுறுப்பினர்கள் தமது கடமைகளைப் பொறுப்புற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் 1 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருநு்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சின் சார்பில் இருவரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒருவரும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.

கடமைகளைப் பொறுப்புற்ற நகரசபை தலைவர் க.செல்வராசா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு உன்னதமான சேவையை வழங்குவதே எமது நோக்கம்.

முன்னைய தலைவர்களின் பாதையில் சென்று மக்கள் மீது அதீத நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் முகமாக எமது சுவைகள் இருக்கும்' என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X