2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலை இளைஞர்களுக்கான ஹோட்டல் துறை பயிற்சி

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

தேசிய அபிவிருத்தி வங்கியின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் 32 இளைஞர்களுக்கு ஹோட்டல் துறை பயிற்சிகள் வழங்கப்பட்டன. 6 மாதங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில் சித்தி பெற்ற 23 பேருக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  திருகோணமலை வெல்கம் பே விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

ஜீவன வாழ்வாதார பியற்சி மற்றும் கடன் திட்டத்தின் கீழ் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. தேசிய அபிவிருத்தி வங்கியின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ருஷெல் டி மெல், மவுண்ட் லெவன்யா ஹொட்டல் பாடசாலை இயக்குநர் கலாநிதி பியுபல்ஸ் சில்வா, ஹொட்டல் பாடசாலை அதிபர் எம்.ஹிலன்கமுவ ஆகியோர் இவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இவர்களுடன் புதிதாக பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட 32 இளைஞர்களுக்கான அறிமுக நிகழ்வும் இதன்போது நடத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X