Super User / 2011 மே 19 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)
வெருகல் துவாரகா வித்தியாலத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புகள் உள்ள இப்பாடசாலையில் சுமார் 482 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பாடசாலைக்கு 23 ஆசிரியிர்கள் தேவையான போதும் 14 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர்.
அண்மைய இடமாற்றத்தின் போது இப்பாடசாலையிலிருந்த 8 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்ட்டு அவர்களுக்கு பதிலாக 2 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒரு ஆசிரியர் நீண்ட கால விடுமுறையில் உள்ளதுடன் மற்றவர் வேறு பாடசாலைக்கு பதிலாக இணைக்கப்பட்டுள்ளார்.
இப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் தங்களது பாடசாலைக்கு இணைக்கப்பட வேண்;டும் அல்லது தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே பெறறோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

19 minute ago
24 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
17 Dec 2025
17 Dec 2025